குழந்தையின்மை பிரச்சனை நீங்க… முருங்கையின் இந்தப் பொருளை சாப்பிடுங்க; டாக்டர் மைதிலி

குழந்தையின்மை பிரச்சனையை போக்க முருங்கை பிசினை மருந்தாக உபயோகிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மேலும், இதன் பல்வேறு நன்மைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தையின்மை பிரச்சனையை போக்க முருங்கை பிசினை மருந்தாக உபயோகிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மேலும், இதன் பல்வேறு நன்மைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Moringa gum

முருங்கை பிசினில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துகள் இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை எவ்வாறு மருந்தாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

நோய் எதிர்ப்பு தன்மையை பல மடங்கு அதிகரிக்கும் ஆற்றல் வைட்டமின் சி-க்கு இருக்கிறது. அந்த வைட்டமின் சி, முருங்கை பிசினில் இருப்பதாக அவர் கூறுகிறார். இதேபோல், கண்பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் ஏ-வும் முருங்கை பிசினில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

குடல் பகுதியின் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்தும் முருங்கை பிசினில் போதுமான அளவு இருக்கிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். மலச்சிக்கல் பாதிப்பை, முருங்கை பிசின் குணப்படுத்துகிறது.

முக்கியமாக, குழந்தையின்மை பாதிப்பில் இருந்து வெளியே வருவதற்கு முருங்கை பிசின் மருந்தாக பயன்படுகிறது என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தரத்தை இயற்கையாகவே அதிகரிக்கும் ஆற்றல் முருங்கை பிசினுக்கு இருப்பதாக அவர் கூறுகிறார்.

Advertisment
Advertisements

எனவே, குழந்தையின்மைக்காக சிகிச்சை பெறும் ஆண்கள் அனைவரும் தங்கள் அன்றாட உணவில் சுமார் 90 நாட்களுக்கு முருங்கை கீரை மற்றும் முருங்கை பிசினை சேர்த்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இது தவிர தற்காலிக ஆண்மைக் குறை பாதிப்பையும் சரி செய்ய, முருங்கை பிசின் பயன்படுவதாக மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.

நாட்டு மருந்துக் கடை மற்றும் ஆயுர்வேத சித்த மருந்தகங்களில் முருங்கை பிசின் எளிதாக கிடைக்கும். இதனை, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து இரும்புக் கடாயில் வறுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், இதன் சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்தப் பொடியை அரை டீஸ்பூன் அளவில், ஒரு கிளாஸ் காய்ச்சிய பசும்பாலில் கலந்து காலை நேரத்தில் குடிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். இவ்வாறு 60 முதல் 90 நாட்களுக்கு தொடர்ச்சியாக குடித்தால் ஆண்களுக்கான குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

moringa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: