/indian-express-tamil/media/media_files/2025/05/24/apjeBSdQJbW0cszyTZmy.jpg)
நரம்புகள் அவற்றின் வலிமையை இழக்கும் போது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் உருவாகும். குறிப்பாக, தலை முடி உதிர்வில் இருந்து உடல் சோர்வு வரை ஏராளமான அறிகுறிகள் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம் என்று மருத்துவர் நித்யா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
மேலும், பார்வை குறைபாடு, பேசுவதில் தெளிவின்மை, அன்றாட பணிகள் செய்வதில் சிரமம் போன்ற மாற்றங்கள் நரம்பு மண்டலம் தளர்வடையும் போது ஏற்படும். இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு உணவு முறை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
அந்த வகையில், நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும் ஆற்றல் முருங்கை பிசினில் இருக்கிறது. இதற்காக முருங்கை பிசினை தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை பயன்படுத்தினால் நரம்புகள் வலிமை அடையும். இது தவிர முருங்கை பட்டையையும் நாம் உபயோகிக்கலாம்.
இப்போது, கடைகளில் முருங்கை பட்டையை பொடியாக விற்பனை செய்கின்றனர். இந்த முருங்கை பட்டை பொடியை தண்ணீரில் அரை ஸ்பூன் அளவிற்கு கலக்க வேண்டும். இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதன் பின்னர் வடிகட்டி குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார்.
இவ்வாறு, தொடர்ச்சியாக ஒரு நாளைக்கு 1 முறை குடித்து வந்தால் நரம்பு மண்டலம் சீராக இயங்கும் என்று அவர் கூறுகிறார். மேலும், நரம்பு பாதிப்பினால் ஏற்படும் வலியையும் இது குறைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, ஆரோக்கியமான உணவுகளை தினசரி எடுத்துக் கொண்டு, சீராக உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம்முடைய நரம்பு மண்டலம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.