/indian-express-tamil/media/media_files/2025/04/06/5iGeIgKr5IAiL9w7G8V1.jpg)
உடல் மெலிந்த சுகர் பேஷண்ட்ஸ் உடலை தேற்ற டாக்டர் நித்யா கசாயம் ஒன்றை பற்றி கூறுகிறார். இதனால் மெலிந்த உடல் கூட நல்ல தெம்புடன் இருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
சர்க்கரை நோய் நமது உடலில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. குறிப்பாக, கால் பாத எரிச்சல், உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, கை கால் நடுக்கம் போன்ற நரம்பு தொடர்பான பாதிப்புகள் இதில் அடங்கும். கண் பார்வை குறைபாடு, சிறுநீரக மற்றும் இதய பிரச்சனைகளும் சர்க்கரை நோயின் பொதுவான பக்கவிளைவுகளாகும்.
ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைபாடு, விந்தணு குறைபாடு மற்றும் விந்தணுவின் தரம் குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக மாறுவதுடன், முன்கூட்டியே மெனோபாஸ் ஏற்படுவதும் உண்டு.
சர்க்கரை நோயின் அறிகுறிகள் தெரியாவிட்டாலும், HBA1C அளவு 7.5-8 க்கு மேல் இருந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருந்தால், உடலின் அனைத்து செல்களும் பாதிக்கப்படலாம். இது உடல் எடை குறைதல் அல்லது அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறை மற்றும் சித்த மருத்துவம்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த, நார்ச்சத்து அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி வகைகளான கருப்பு கவனி, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவற்றை மதிய உணவாகவும், சிறுதானிய உணவுகளை இரவு உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதிகமான காய்கறிகளைச் சாப்பிடுவது உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
சித்த மருத்துவத்தில் "நர்வின் டானிக்" என்று அழைக்கப்படும் நரம்பு உரமாக்கிகள், நரம்புகளை வலிமைப்படுத்தி சர்க்கரை நோயைக் குறைக்கும். இதனால் ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறைபாடும், பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளும் சீராகும்.
முருங்கை இலை, சர்க்கரை அளவைக் குறைப்பதற்கும், நரம்புகளை வலிமையாக்குவதற்கும், வாத நோய்களைக் குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரியான உணவு முறை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.
கசாயம் செய்முறை: முருங்கை இலை, சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டி தினமும் எதாவது ஒருவேளை குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.