ரத்தக் குழாயில் அடைப்பு? இந்த 5 காய்கறிகளை அவசியம் சாப்பிடுங்க: டாக்டர் பிள்ளை

ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை குணப்படுத்த கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 காய்கறிகளை பற்றி டாக்டர் பிள்ளை கூறுகிறார்.

ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை குணப்படுத்த கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 காய்கறிகளை பற்றி டாக்டர் பிள்ளை கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
raththa adaippu

நம் உடலில் இரத்த நாளங்களில் கொழுப்பு அல்லது பிற பொருட்கள் படிந்து அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. நாம் உண்ணும் உணவே மருந்து என்பது போல, இந்த அடைப்பை சரி செய்யக்கூடிய உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில், இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்க உதவும் ஐந்து காய்கறிகளைப் பற்றி டாக்டர் பிள்ளை அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

1. தக்காளி

தக்காளியில் ஐசோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. இது இரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்பை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி ரசம், தக்காளி தொக்கு போன்ற பல்வேறு வழிகளில் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

2. பீட்ரூட்

Advertisment
Advertisements

பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் அதிக அளவில் உள்ளன. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து அடைப்புகள் நீக்கப்படுகின்றன. பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

3. வெங்காயம் 

வெங்காயத்தில் ஒருவித அமிலம் உள்ளது. இது இரத்த நாளங்களில் படியும் அடைப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. சிறிய வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் இரண்டுமே நல்லது. வெங்காயத்தை சமையலில் தவறாமல் பயன்படுத்துங்கள்.

4. கேரட்

கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆக செயல்பட்டு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.

5. கீரைகள்

கீரைகளில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகளவில் உள்ளன. இது இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதோடு மலச்சிக்கல் பிரச்சனையும் தீர்க்கிறது. கீரைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் இரத்த நாளங்களில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் படிவுகளை நீக்குகின்றன. அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரை என பலவிதமான கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த ஐந்து காய்கறிகளையும் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

blood circulation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: