மூலம் நோய்? இந்த உணவுகளை மட்டும் தொடாதீங்க; இப்படியான பழங்கள் ரொம்ப நல்லது: டாக்டர் சிவராமன்
மூலம் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கிழங்கு வகை உணவுகள் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மூலம் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கிழங்கு வகை உணவுகள் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மலம் வெளியேறும் ஆசனவாய் பகுதியில் ஏற்படும் பொதுவான பாதிப்புகளை மூலம் என்று அழைப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு தடுக்கலாம் என்று ஹெல்த் பேஸ்கெட் என்ற யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் மூலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மலத்துடன் சேர்த்து இரத்தம் கசிவது, மலம் வெளியேறிய பின்னர் ஏற்படும் வலி ஆகியவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
மூலம் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கிழங்கு வகை உணவுகள் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வெந்தயம் போன்றவற்றை சாப்பிடலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
மேலும், மூலம் நோய் குணமடையும் வரை காரம், கோதுமை, மற்றும் கோழிக்கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை உடல் சூட்டை அதிகரிப்பதால், இவற்றை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
வாழைப்பழம், தர்பூசணி உள்ளிட்ட அனைத்து விதமான பழங்களையும் சாப்பிடலாம். இவை அனைத்தையும் பின்பற்றும் போது மூலம் பாதிப்பை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.