/indian-express-tamil/media/media_files/2025/03/19/UBMyf118vkoCzrQEu3dA.jpg)
சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் உணர்வு பலருக்கும் சங்கடத்தை அளிக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், நமது பாரம்பரிய மருத்துவத்தில் இதற்கு எளிய தீர்வு இருப்பதாக மருத்துவர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி நொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் நீராகாரம், உடலுக்கு நன்மை பயக்கும் பலவிதமான பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்க உதவுகின்றன.
சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்சினை ஏற்படுவதற்கு உணவானது குடலில் மிக வேகமாக பயணிப்பதே முக்கிய காரணம். நீராகாரம் குடிப்பதால், உணவின் இந்த வேகம் கட்டுப்படுத்தப்பட்டு, செரிமான செயல்பாடு சீராக நடைபெறுகிறது.
மருத்துவர் சிவராமன், இந்த பிரச்சினை உள்ளவர்கள் வாரம் இருமுறை, காலையில் வெறும் வயிற்றில் அல்லது மதிய உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பு ஒரு கிளாஸ் நீராகாரம் குடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம் என்று பரிந்துரைக்கிறார். தொடர்ந்து இதை செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
அதே நேரத்தில், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் பின்பற்றுவது அவசியம். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்வதும், அதிக காரம் மற்றும் மசாலா சேர்த்த உணவுகளைத் தவிர்ப்பதும் நீராகாரத்தின் பலனை மேலும் அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் சிவராமன். எனவே, சாப்பிட்டவுடன் மலம் கழிக்கும் பிரச்சினைக்கு நீராகாரத்தை எடுத்துகொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.