இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், இயற்கை உணவுகளின் நன்மைகளையும் பாரம்பரிய உணவில் உள்ள நன்மைகளையும் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டத்தில் மருத்துவர் கு. சிவராமனுக்கு முக்கிய பங்கு உண்டு.
Advertisment
மருத்துவர் கு. சிவராமன் நமது பாரம்பரிய உணவுகளில் உள்ள சத்துப் பொருட்கள், நன்மைகள் என பலவற்றையும் அறிவியல் மொழியில் பேசியது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த வகையில், மிகச் சுவையான, மிகச் சிறந்த சத்துள்ளது, குழந்தைகளுக்கு நல்லது என்று நிலக்கடலை சட்னியை மருத்துவர் கு. சிவராமன் பரிந்துரைக்கிறார்.
நிலக்கடலையை கலக்கா, வேர்க்கடலை, மல்லாட்ட, மணிலா ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு பெயரில் அழைக்கிறார்கள். இங்கே நாம் நிலக்கடலை என்ற பெயரைப் பயன்படுத்துகிறோம்.
Advertisment
Advertisements
நிலக்கடலையில் அரைக்கிற சட்னி கம்பு தோசை, சோள சோதை ஆகிய சிறுதானிய உணவுகளுக்கு சரியாக தொட்டுக்கொள்ளக் கூடிய பொருத்தமான, ஆரோக்கியம் தரக்கூடிய சட்னி நிலக்கடலை சட்னி என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.
நிலக்கடலையை எடுத்து வறுத்து, அதனுடன் சிறிது அளவு தேங்காய், மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கப்படும் நிலக்கடலை சட்னியில் புரதச்சத்து நிறையக் கிடைக்கும்.
நிலக்கடலைச் சட்னியில் இயல்பாகவே உடலுக்கு நல்லதைத் தரக்கூடிய இரும்புச் சத்து இருக்கிறது, துத்தநாகச் சத்து இருக்கிறது, புரதச்சத்து நிறைய இருக்கிறது. வாரத்துக்கு ஒருநாள், இரண்டு நாள் இந்த நிலக்கடலைச் சட்னியை உணவில் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.
அதே நேரத்தில், இந்த நிலக்கடலை சட்னி செய்யும்போது நிறைய எண்ணேய் ஊற்றி சாப்பிடுவது அவ்வளவு நல்லது இல்லை என்று அறிவுறுத்துகிறார். இவ்வளவு நன்மை கொண்ட நிலக்கடலை சட்னி எப்படி செய்வது என்று விஎன்எஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை பூண்டு காய்ந்த மிளகாய் எண்ணெய் தேங்காய் புளி உப்பு கறிவேப்பிலை கடுகு உளுந்து
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கப் அளவிற்கு நிலக்கடலையை போட்டு 8 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர், நிலக்கடலையின் தோலை நீக்கிக் கொள்ளலாம். இதையடுத்து அடுப்பில் இருக்கும் பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் பூண்டு, புளி மற்றும் மூன்று காய்ந்த மிளகாய்கள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
பின்னர், இவை அனைத்தையும் வறுத்து வைத்திருந்த நிலக்கடலையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதனை அரைக்கும் போது கூடுதலாக அரை கப் துருவிய தேங்காய், ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இதையடுத்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியின் மீது கறிவேப்பிலை மற்றும் கடுகு ஆகியவற்றை தளித்து ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் நிலக்கடலை சட்னி தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.