/indian-express-tamil/media/media_files/2025/02/28/f8RWrP00CiSoH10CdEmC.jpg)
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தசைகளின் வளர்ச்சியை சீராக்குவதற்கு புரதச் சத்து இன்றி அமையாதது. உலகளவில் எடுத்துக் கொண்டால் இந்தியர்களிடம் புரதச் சத்து தொடர்பான விழிப்புணர்வு இல்லை என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதற்காக புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. எனினும், காய்கறிகளில் இருக்கும் புரதச் சத்தை எவ்வாறு முழுமையாக பெற்றுக் கொள்வது என மருத்துவர் சிவராமன் அறிவுரை வழங்குகிறார்.
முருங்கைக் காய், கத்தரிக்காய் மற்றும் வெண்டக்காய் போன்ற காய்கறிகளை புளிக் கரைசலில் ஊறவைத்து, அவற்றை அந்தக் கரைசலுடன் சேர்த்து சமைக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். இவ்வாறு காய்கறிகள் வேகும் போது புளியில் இருக்கும் டார்டாரிக் ஆசிட், காய்கறிகளில் இருக்கும் புரதத்திற்கு கவசமாக செயல்படுகிறது என்று கூறுகிறார்.
இப்படி செயல்படும் போது காய்கறிகளில் இருக்கும் புரதம் சேதமடையாமல் நம் உடலுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. இதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. பெரும்பாலும், காய்கறிகளை கொதிக்க வைக்கும் போது அதன் சத்துகள் இழக்கப்படும். இதற்காக தான் காலங்காலமாக புளிக் கரைசல் பயன்படுகிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
சாம்பார், ரசம் போன்றவற்றில் புளிக் கரைசல் சேர்க்கப்படுவதற்கான காரணம் இது தான். இவ்வாறு ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று சிவராமன் கூறுகிறார். அறிவியலை கடந்த அறம் சார்ந்து முன்னோர்கள் செயலாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - A S home Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.