படுத்த உடனே தூக்கம் வர... இந்த 4 பொருள் சேர்த்த பொடி; இந்த நேரத்துலதான் குடிக்கணும்: டாக்டர் யோக வித்யா
இரவு நேரத்தில் உறங்கும் போது மட்டுமே மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தான் பகல் நேரத்தில் உறங்கினாலும், மெலட்டோனின் சீராக சுரக்க வேண்டுமென்றால் இரவு நேர தூக்கம் அவசியம்.
இரவு நேரத்தில் உறங்கும் போது மட்டுமே மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தான் பகல் நேரத்தில் உறங்கினாலும், மெலட்டோனின் சீராக சுரக்க வேண்டுமென்றால் இரவு நேர தூக்கம் அவசியம்.
இன்றைய சூழலில் பெரும்பாலானவர்களுக்கு இரவு நேரத்தில் சரியாக தூக்கம் வருவதில்லை என்று கூறுகின்றனர். இரவு படுக்கைக்கு சென்ற பின்னர், சில மணி நேரங்கள் தூங்காமல் பலரும் அவதிப்படுவதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் மற்றும் இதனை எவ்வாறு சரி செய்யலாம் என்று தனது யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
அதன்படி, மதிய நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வரை தூங்குவதன் காரணமாக பலருக்கு இரவில் உறக்கம் வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக மதிய நேரத்தில் உறங்குவதை தவிர்க்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். இதனால், இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும் என்று அவர் கூறுகிறார்.
இரவு நேரத்தில் உறங்கும் போது மட்டுமே மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தான் பகல் நேரத்தில் உறங்கினாலும், மெலட்டோனின் சீராக சுரக்க வேண்டுமென்றால் இரவு நேர தூக்கம் அவசியம். எனவே, இரவில் சீராக தூக்கம் வருவதற்கு பால் மற்றும் பழம் சாப்பிடலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைக்கிறார்.
இது தவிர மற்றும் சில பொருட்களையும் மருந்தாக பயன்படுத்தலாம். அந்த வகையில், கசகசா, ஜாதிக்காய், சடாமாஞ்சில் மற்றும் அமுக்கரா ஆகிய அனைத்தையும் சம அளவில் எடுத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இவற்றை இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக பாலில் கலந்து குடித்தால் நன்றாக உறக்கம் வரும் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார். எனவே, இது போன்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய தூக்கத்தை சீரமைத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.