நாம் சாப்பிடும் உணவு இரத்தத்தில் குளூகோஸாக மாறி, ஆற்றலாக உருவெடுக்கும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த குளூகோஸ், ஆற்றலாக மாறுவது இல்லை. இதன் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதால், சர்க்கரை நோயாக மாறி விடுகிறது.
இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தவறினால், அவை பெரும் பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும். நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரக கோளாறு, கண் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை இவை ஏற்படுத்தக் கூடும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். நம் அன்றாட உணவு வழக்கத்தை சீரமைப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அப்படியாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி பார்ப்போம்.
தினமும் சாப்பிடவேண்டியவை
1. கோதுமை,ராகி, சிறுதானியங்கள் (சாமை, குதிரைவாலி, வரகு)
2. பழுப்பு அரிசி / குவினோவா
3. அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை
4. பப்பாளி, பேரிக்காய், கொய்யா, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி
5. முட்டைகோஸ், பீர்க்கங்காய், புடலங்காய், வெண்டைக்காய்
6. மொச்சை, கொள்ளு, கப்சி காய்கறிகள் (வேர்க்கிழங்கு தவிர)
7. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் (ஒட்ஸ், பாதாம், வால்நட்)
8. எலுமிச்சைச் சாறு, வெந்தய நீர், மோர் (உப்பு இல்லாமல்)
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. வெள்ளை அரிசி, மைதா, சேமியா, பேக்கரி பொருட்கள்
2. அதிக சர்க்கரை உள்ள பழங்கள் (மாம்பழம்,வாழைப்பழம், திராட்சை)
3. தேநீர், காப்பி, கூழ் ஆகியவற்றை அதிக சர்க்கரையுடன் குடிக்க கூடாது
4. கார்போனேற்றப் பானங்கள் & பாட்டில் ஜூஸ்
5. அதிக எண்ணெய், பொரித்த உணவுகள் (வடை, பஜ்ஜி, சமோசா)
6. இனிப்பு உணவுகள் (லட்டு, ஜிலேபி, மிட்டாய் )
7. அதிக உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இந்த உணவுப்பழக்கத்துடன் நடைப்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இவற்றை பின்பற்றினாலே சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.