கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற சந்தேகங்களுக்கு ஏ.எஸ்.எம் இன்ஃபோ யூடியூப் பக்கத்தில் டாக்டர் ராஜலட்சுமி கூறியிருப்பதாவது,
கீரையை நன்கு கழுவி சமைக்க வேண்டும். அதிகளவில் பச்சையாக சாப்பிடக்கூடாது. நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். கீரை சமைக்கும் முன்பு கொஞ்சம் மஞ்சள், உப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள கிருமிகள் சிறுசிறு பூச்சிகள் இல்லாமல் சுத்தமாகும்.
கீரையை ஒரே நேரத்தில் அதிகளவில் சாப்பிடக்கூடாது. புளி சேர்த்து கீரையை சமைக்க கூடாது. இதற்கு பதிலாக எலுமிச்சை பழம் சேர்த்து கொள்ளலாம். சமைத்து முடித்த பிறகு இறுதியில் எலுமிச்சம் சாறு சேர்த்து கொள்ளலாம்.
கீரை சாறை வடிகட்டக்கூடாது. சாறோடு சேர்த்து தான் சாப்பிட வேண்டும். கீரையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும்.
கீரையை சமைக்கும் போது இப்படி கழுவுங்க
இரவில் கீரையை சாப்பிட கூடாது. ஏனென்றால் முழுமையாக சுத்தம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கீரையை மீண்டும் சூடு செய்து சாப்பிட கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.