பாகற்காய் உடலுக்கு நிறைய சத்துக்களை தருகிறது ஆனால் அதனை செய்யத்தெரியாமல் செய்வதால் நிறைய பலன்களை இழக்கிறோம்.அதேபோல தான் ஒவ்வொரு உணவையும் செய்யத்தெரியாமல் செய்து அதன் சத்துக்களை இழக்கிறோம்.
பாகற்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது என்கிறார் டாக்டர் சிவராமன்.
மேலும் அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான வழிகள் குறித்து டாக்டர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ஆரோக்கியமான வாழ்வுக்கு நாம் உணவில் கசப்பு, துவர்ப்பு சேர்க்க வேண்டும் என்கிறார் மருத்துவர். ஆனால் இன்றைய சூழலில் அதன் சுவையையே நாம் மாற்றி உணவு சமைத்து சாப்பிடுகிறோம். அப்படி இருக்கையில் நமக்கு இருக்கும் பல நோய்களுக்கு மருந்துகளை தான் அதிகமாக சாப்பிடுகிறோம். அவற்றை குணமாக்க வழியை தேடுவதில்லை.
நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழும் வழிகள்! Dr Sivaraman speech in Tamil | Ways to live a long happy life
கசப்பும் துவர்ப்பும் மட்டும் தான் அடிக்கடி சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்றாகும். அந்த வகையில் இந்த சுவையில் உள்ள பாகற்காய், கடுக்காய், இஞ்சி, சுக்கு என பலவகையானவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுவும் அவற்றின் சுவையை மாற்றாமல் எடுத்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை கருப்பு சுவையுடன் தான் எடுத்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நோய் பெருகிக்கொண்டே வருகிறது. அதனால் உணவில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும்.
அதேபோல உணவில் கவனம் செலுத்தியும் மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும் பல நோய்கள் நம்மை விட்டு நீங்கிவிடும் என்கிறார் டாக்டர் சிவராமன்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.