/indian-express-tamil/media/media_files/2025/05/02/svGnlEzdbAA3h5ALd4uQ.jpg)
சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்றுவது ரத்த அழுத்தத்தை சீராக பரமாரிப்பது, ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்தத செல்கள் உற்பத்தி, எழும்புகளின் நலனை பேணுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.
ஆனால் சிறுநீரக கோளாறுக்கு காரணம் மற்றும் ஆரம்ப நிலை கிட்னி செயல்பாட்டை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் கார்த்திகேயன் அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
அதிகப்படியான உப்பு சிறுநீரில் கால்சியம் மற்றும் பிற தாதுக்களை அதிகரிக்கச் செய்து, அவை ஒன்று சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்க வழிவகுக்கும். எனவே, உப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல வேறு சில வழிகளையும் பார்க்கலாம்.
டிப்ஸ் 1: அந்த வகையில் ஒரு நாளைக்கு குறைந்தது 2-2.5 லிட்டர் சிறுநீர் வெளியேறும் வரை நிறைய தண்ணீர் குடிக்கவும். இது சிறுநீரை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாகுவதைத் தடுக்கும்.
டிப்ஸ் 2: எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் மற்றும் அவற்றின் சாறுகளில் சிட்ரேட் உள்ளது. இது கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
டிப்ஸ் 3: பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்கள் மற்றும் கீரை, ப்ரோக்கோலி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.
டிப்ஸ் 4: முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து மற்றும் கீரைகள், நட்ஸ், விதைகள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.
டிப்ஸ் 5: பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிப்ஸ், ஊறுகாய் போன்றவற்றைத் தவிர்க்கவும். அதிக உப்பு சிறுநீரில் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.