/indian-express-tamil/media/media_files/2025/04/04/QLUgddOqNeGqm0kKEk9o.jpg)
நெஞ்சு சளியை வெளியேற்ற மிளகு, திப்பிலி என எளிய மூலிகையைக் கொண்டு இயற்கை வைத்தியத்தை டாக்டர் நித்யா கூறியுள்ளார். Image: Freepik
நெஞ்சு சளியை வெளியேற்ற மிளகு, திப்பிலி உள்ளிட்ட பொடி அரை ஸ்பூன் இப்படி சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று டாக்டர் நித்யா வீட்டு வைத்தியம் சொல்கிறார். இந்த வீட்டு வைத்தியம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
நெஞ்சு சளியை வெளியேற்ற மிளகு, திப்பிலி என எளிய மூலிகையைக் கொண்டு இயற்கை வைத்தியத்தை காஸ்மோ ஹெல்த் அஃப்சியல் (@cosmohealthoffl) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
நெஞ்சுசளியை வெளியேற்ற இயற்கை முறையில் வீட்டு வைத்தியத்தை டாக்டர் நித்யா கூறுகிறார்: “சிற்றரத்தை 200 கிராம், மிளகு 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து திப்பிலி 50 கிராம், இது நுரையீரலில் இருக்கக்கூடிய கபத்தை வெளியேற்றுவதற்கு மிகச் சிறந்த ஒரு மூலிகை. அடுத்து ஏலக்காய் 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த மூலிகைகளை எல்லாம் லேசாக வறுத்துக்கொண்டு மிக்ஸியில் பவுடர் பண்ணி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பவுடரை தினமும் அரை டீஸ்பூன் 2 டம்பளர் தண்ணீரில் போட்டு 1 டம்பளர் அளவு வரும் வரை காய்ச்சி அரை ஸ்பூன் அளவு தேன் சேர்த்து இல்லையென்றால் கருப்பட்டி சேர்த்து காலையில் தினமும் குடித்து வர வேண்டும். காலையில் எழுந்ததும் உடலில் சோர்வு இருந்தால், தைராய்டு தொடர்பான பிரச்னை இருந்தால் இதைக் குடிக்கலாம்” என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.