காலையில் இஞ்சி சாறு, தேன்... உடல் எடை குறைய எளிய வழி கூறும் மருத்துவர் சிவராமன்

மருத்துவர் கு. சிவராமன், உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள், காலையில் இஞ்சி சாறு, தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று மிக எளிமையான வழிகளைக் கூறுகிறார்.

மருத்துவர் கு. சிவராமன், உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள், காலையில் இஞ்சி சாறு, தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று மிக எளிமையான வழிகளைக் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
ginger honey

உடல் எடையைக் குறைக்க மருத்துவர் கு. சிவராமன் மிக எளிமையான வழிகளைக் கூறுகிறார்.

தற்காலத்தில் பலரும் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க உணவு முறை, உடற்பயிற்சி, விடா முயற்சி ஆகியவற்றால் சாத்தியம். ஆனால், உடல் எடையைக் குறைக்க உணவுமுறை எப்படி உதவும், என்ன உணவு எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பல ஆலோசனைகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

ஆனால், மருத்துவர் கு. சிவராமன், உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்கள், காலையில் இஞ்சி சாறு, தேன் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்று மிக எளிமையான வழிகளைக் கூறுகிறார்.

மருத்துவர் கு. சிவராமன், பாரம்பரிய உணவுகளில் உள்ள நன்மைகள், மருத்துவக்  குணங்கள், சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகள் ஆகியவற்றை மேடை தோறும் பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 

உடல் எடையைக் குறைக்க மருத்துவர் கு. சிவராமன் கூறும் மிக எளிமையான வழிகளை இங்கே பார்க்கலாம்.

Advertisment
Advertisements

தற்காலத்தில் நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் எளிமையான ஒரு ஆலோசனை, இஞ்சி, தேன், வெந்நீர் எடுத்துக்கொள்ளலாம். சிலர் இஞ்சி, தேன், வெந்நீர்  உடன் ஆப்பிள் சிகர் வினிகர் சேர்த்துக்கொள்கிறார்கள், சிலர் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த தகவல் எல்லாம் சீன மருத்துவத்தில் உள்ளதாக மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார்.

இஞ்சி, தேன், வெள்ளைப் பூண்டு, ஆப்பிள் சிகர் வினிகர்,  வெந்நீர் ஆகிய ஐந்தையும் குடிக்க வேண்டும் என்று சின மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளதாக சிவராமன் கூறுகிறார்.

இதற்கு சித்தமருத்துவத்தில் உள்ள ஒரு பாடலை எடுத்துக்காட்டும் மருத்துவர் கு. சிவராமன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலை கடுக்காய் என்று கூறுகிறார்கள். இன்றைக்கே நீங்கள் தொடங்கலாம், காலையில் இஞ்சி, காலையில் இஞ்சி சாறுடன் துணை மருந்தாக தேன் சேர்த்து சாப்பிட வேண்டும். மத்தியானம், கடும் பகல் சுக்கு. மதியம் சாப்பிடும்போது, ஒரு சிட்டிகை சுக்கு எடுத்து ஒரு துளி நெய்விட்டு சோறுல சேர்த்து சாப்பிடலாம். மாலை கடுக்காய்,  இருகிற மூலிகைகளிலேயே தலைமை மூலிகை என்று கடுக்காயைத்தான் சொல்ல வேண்டும். 

கடுக்காயும் தாயும் கருவில் ஒன்றன்றே, கடுக்காய் தாயினும் மேலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு, பொருள் என்னவென்றால், ஒரு கையில் கடுக்காயும் மறுகையில் தாயையும் வைத்து இதில் சிறந்தது எது என்றால், தாயைவிட கடுகாய் ஒரு படி சிறந்தது. அது எப்படி தாயைவிட கடுக்காய் சிறந்ததாக இருக்க முடியுமா என்று கேட்டால், இதற்கு நகைச்சுவையோடு ஆசிரியர் ஒரு விளக்கம் கூறுகிறார். 

அதாவது, தாய் தனது குழந்தைக்கு 6 சுவையுள்ள உணவுகளைக் கொடுத்து கொடுத்து சில நேரங்களில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடும். ஆனால், ஆறு சுவையுள்ள ஒரே மூலிகை கடுக்காய், அந்த ஆறு சுவையைக் கொடுத்து கொடுத்து நோயைப் போக்குவது கடுக்காய், அதனால், தாயைவிட கடுக்காய் சிறந்தது என்று கூறுகிறார்கள். 

இன்றைய ஆய்வுகள் சொல்கிறது, கடுக்காயில் மட்டும்தான் 6 சுவைகள் இருக்கிறது. ஒரு கடுக்காயைக் கடித்து சாப்பிட்டீர்கள் என்றால், இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, உவர்ப்பு என ஆறு சுவைகளும் தெரியும். இதை இரவில் சாப்பிட சொல்லியிருகிறார்கள்.” என்று மருத்துவர் கு. சிவராமன் கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Basic tips for sustainable weight loss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: