காலையில் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது மிகவும் தவறான ஒன்றாகும். அதிலும் வெறும் வயிற்றில் சில பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள கூடாது. ஒவ்வொன்று உணவிற்கும் அதற்கே உரித்தான சில நற்குணங்கள் உள்ளது. அதனை சரியான நேரத்தில் எடுத்துக்கொண்டால் மட்டுமே அதன் முழு பலனும் கிடைக்கும். அந்த வகையில் எந்தெந்த பழங்கள், காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்றும் சாப்பிட்டால் என்னவாகும் என்பதையும் இந்த பதிவில் பார்ப்போம்.
சிட்ரஸ் பழங்கள், காபி மற்றும் காரமான உணவுகள் போன்ற சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அசௌகரியம் மற்றும் அஜீரணம் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் காலையில் காரமான உணவுகள் மற்றும் மிளகாய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பின்னர் உடலுக்கு அதிகமான நன்மைகளை தரக்கூடிய வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகளவில் உள்ளதால் இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இரத்தத்தில் உள்ள மெக்னீசியத்தின் அளவை உயர்த்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தக்காளியில் இயற்கையாகவே அமிலத்தன்மை அதிகம் உள்ளது. இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வாயு பிரச்சனை, இரைப்பை அழற்சி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று கூறுகின்றனர்.
காலையில் சோடா போன்ற பதப்படுத்தப்பட்ட பானங்களை குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் இது உங்கள் செரிமான செயல்முறையை மெதுவாக்கும்.
அமிலத்தன்மை அதிகமுள்ள ஆரஞ்சு பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், ஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.இப்பழத்தில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால் உணவுக்குழாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் ஆப்பிளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அமிலத்தன்மையும், நார்ச்சத்தும் அதிகளவு உள்ளதால் இது வயிறு பிரச்சனைகள் ஏற்படுத்திவிடும். அதேபோல அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் அது உணவு குழாயில் அரிப்பை ஏற்படுத்தும்.
உடலுக்கு அதிக சத்துக்கள் கொடுக்கும் கொய்யாப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அஜீரண பிரச்சனை உண்டாகும். பப்பாளியையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அஜீரண கோளாறு, வாயு பிரச்சனை, வயிறு உப்புதல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கேரட் போன்ற பச்சைக் காய்கறிகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அவை நார்ச்சத்து நிறைந்தவை, இது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் மற்றும் உங்கள் வயிற்றைப் பாதிக்கலாம்.அதுமட்டுமின்றி தயிரையும் காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்படி சாப்பிட்டால் வயிறுக்கோளாளாறு ஏற்படும். பேக்கரி உணவுகளையும் காலையில் சாப்பிடக்கூடாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“