இரவு நேரத்தில் வெந்தயம் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி மருத்துவர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "வெந்தயத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் சிறிது சீரகப்பொடி சேர்த்து இரவு உணவு முடித்து தூங்கும் முன் சாப்பிட்டு வரலாம்.
இதனால் நீரிழிவு உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சீராகும் என்று மருத்துவர் கூறுகிறார்.
செய்முறை: வெந்தயத்தை எடுத்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வறுத்து ஆறவைத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும். தினமும் இரவு இதனுடன் சீரகப்பொடி சிறிது கலந்து சுடுதண்ணீரில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
இதனால் இரத்த ஓட்டம், செரிமானக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும் என மருத்துவர் கூறுகிறார்.
இரவு நேரத்தில் வெந்தியம் சாப்பிட்டால் இது நடக்கும்
சீரகம் மற்றும் வெந்தயம் இரவில் சாப்பிடுவதால் இரத்த. சரியான முறையில் ஓடும், உடல் ஆரோக்கியத்துடனும் நல்ல சுறுசுறுப்பையும் கொடுக்கும். சீரகம் மற்றும் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்துவதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குறையும். இவை உங்கள் உடலை சீராக செயல்பட வைக்கும்.
உடலில் உள்ள வீக்கத்தை குறைக்க உதவும். சீரகம் மற்றும் வெந்தயம் உடலின் மூட்டுகளில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை சரி செய்ய ய்தவும். சீரகம் மற்றும் வெந்தயம் இரவில் சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்ப நிலை சமநிலையில் இருக்கும் என்கிறார் மருத்துவர் நித்யா.
இரவில் சாப்பிடுவதன் மூல உடல் அமைதியான நிலையில் இருக்கும், தூக்கமும் நல்ல முறையில் வரும், மன அழுத்தம் குறையும்.மேலும் இரவில் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.