உடலில் ரத்தம் அளவை அதிகரிக்க இந்த டேஸ்டி ப்ரை... கர்ப்பிணி பெண்கள் நோட் பண்ணுங்க!

உடலில் ரத்தம் அளவை அதிகரிக்ககவும் கர்ப்பிணி பெண்கள் முதல் இரத்தசோகை உள்ளவர்கள் என அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது ஈரல்.

உடலில் ரத்தம் அளவை அதிகரிக்ககவும் கர்ப்பிணி பெண்கள் முதல் இரத்தசோகை உள்ளவர்கள் என அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டியது ஈரல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஈரல் வறுவல்

ஆட்டு ஈரல் ப்ரை

ஆட்டு ஈரலை அடிக்கடி சாப்பிடுவதால் இரத்த சோகை நீங்கி உடலில் இரத்தம் நன்கு ஊறும் இதனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால் எலும்புகள் வலுபெற்று உடல் ஆரோக்கியம் பெறும் இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும்.

Advertisment

இவ்வளவு நன்மைகள் கொண்ட ஆட்டு ஈரலில் வறுவல் செய்வது பற்றி ஷெரின்’ஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 

தேவையான பொருட்கள்

ஆட்டு ஈரல்
எண்ணெய்
சோம்பு
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
பெரிய வெங்காயம்
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா
கொத்தமல்லி தூள்
மிளகு தூள்
கொத்தமல்லி தழை

Advertisment
Advertisements

செய்முறை 

ஆட்டு ஈரல் வாங்கி சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், சோம்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். 

பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கி  அதில் நறுக்கிய ஈரல், உப்பு, மஞ்சள் தூள் போட்டு வதக்கி ஒரு ஐந்து நிமிடம் வேக விடவும். 

ஆட்டு ஈரல் இப்படி செஞ்சு குடுங்க உடம்பில் ரத்த அளவு அதிகரிக்க | Liver Fry In Tamil

எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மிளகாய் தூள், கரம் மசாலா, கொத்தமல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து வேக வைப்பதற்காக தண்ணீர் சேர்த்து இப்போது வேக வைக்க வேண்டும். 

நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிது மிளகுத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ஆட்டி ஈரல் ரெடி.

blood circulation blood

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: