சைவம் சார்ந்த புரதங்களை நாம் உணவில் எடுத்து கொள்ளும் போதும் நாம் ஆரோக்கியமாக வாழலாம். அப்படி சத்து மிகுந்த சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய கீரையாக வெந்தய கீரை உள்ளது.
கீரைகளில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை. அந்த அளவுக்கு அற்புதமான நன்மைகள் கீரைகளில் உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்கள் கீரைகளில் உள்ளன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்மை அளிக்க கூடிய அனைத்து சத்துக்களும் கீரைகளில் உள்ளன.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தினமும் கீரைகள் எடுப்பதால் பெறும் நன்மைகள் உள்ளது என்று மருத்துவர் கெளதமன் கூறுகிறார். நீரிழிவு நோய்க்கு எல்லா வகையான மருத்துவ முறைகளும் ஆய்வுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உணவுமுறை என்னவென்றால் அது நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான்.
அதிலும் நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட உணவுகளில் முதன்மையானது கீரைகள் தான். இது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
வெந்தய கீரையின் பயன்கள்:
வெந்தயத்தை போன்றே அதன் இலைகளாகிய வெந்தய கீரைகளிலும் ஏராளமான ஊட்ட சத்துக்கள், ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று ரத்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுவது ஆகும்.
வெந்தயக்கீரைகள் உணவுக்கு பிறகு சர்க்கரை அளவு திடீரென உயர்வதை கட்டுப்படுத்த உதவும். மேலும் இரத்த சர்க்கரைக்கு எதிரான இன்சுலின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும்.
அதுமட்டுமின்றி வெந்தயக்கீரை கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கெட்ட கொழுப்பை குறைக்கின்றது.
இந்த கீரையை மட்டும் சாப்பிடுங்க, நீரிழிவினால் ஏற்படும் பாதிப்பை வேரோடு நீக்கும் !! Dr.கௌதமன்
இப்படி அதிக சத்துக்கள் நிறைந்த வெந்தய கீரையை வாரம் மூன்று முதல் நான்கு முறை அதிகம் கிடைப்பின் தினசரி எடுத்து கொள்ளலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த ஒன்றாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“