/indian-express-tamil/media/media_files/2025/05/21/8JTphh3NdiEGw40g4SrW.jpg)
இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வாழ நாம் விலையுயர்ந்த ஆப்பிள்களைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெறும் நான்கு கற்பூரவல்லி இலைகளைப் பறித்து மென்று சாப்பிட்டாலே போதும், ஆப்பிள் தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை விட 42 மடங்கு அதிக சத்துக்களைப் பெறலாம் என்று டாக்டர் கௌதமன் கூறுகிறார். அதைவைத்து வர்ஷிகா கிச்சன் லைஃப்ஸ்டைல் யூடியூப் பக்கத்தில் கற்பூரவல்லி சட்னி செய்து இருப்பது பற்றி பார்ப்போம்.
இது நமது இளமையையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் கற்பூரவல்லியின் மகத்தான சக்தியை வெளிப்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் பலரும் ரத்தக் கொழுப்பு விகிதாச்சார மாறுபாடுகளாலும் (உயர் கொலஸ்ட்ரால், குறைந்த கொலஸ்ட்ரால் விகிதம்) மற்றும் ட்ரைகிளிசரைட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொலஸ்ட்ரால் சிரமங்களுக்காக மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் கூட, தினமும் நான்கு கற்பூரவல்லி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் தங்கள் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காணலாம். இது கொலஸ்ட்ரால் சார்ந்த விகிதாச்சார மாறுபாடுகளைக் குறைத்து, உடல் நலத்தை மேம்படுத்தும் ஒரு எளிய மற்றும் இயற்கையான வழி ஆகும்.
கற்பூரவல்லி வெறும் ஒரு மூலிகை இலை மட்டுமல்ல, அது இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் இறைவன் அளித்த ஒரு மிகச் சிறந்த மருந்து. இதை வைத்து சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி ஆகியவற்றை வதக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் மற்றும் உப்பு போட்டு அரைத்தால் அவ்வளவு தான் கற்பூரவல்லி சட்னி ரெடி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.