ரத்தத்தை விருத்தியாக்கும் இந்தக் கீரை... ஆண்களுக்கு அருமருந்து; பெண்களுக்கு வரப்பிரசாதம்: இப்படி செய்து சாப்பிடுங்க!

இரத்தத்தை விருத்தியாக்கும் தன்மை புளிச்சக் கீரைக்கு இருக்கிறது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த புளிச்சக் கீரையை எவ்வாறு தொக்கு வைத்து சாப்பிடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.

இரத்தத்தை விருத்தியாக்கும் தன்மை புளிச்சக் கீரைக்கு இருக்கிறது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த புளிச்சக் கீரையை எவ்வாறு தொக்கு வைத்து சாப்பிடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Spinach thokku

ஆண்மையை அதிகரிக்கும் ஆற்றல் புளிச்சக் கீரைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜாதிக்காய், சுக்கு ஆகியவற்றை பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனிடையே, பாசி பருப்பு, மிளகாய், உப்பு ஆகியவற்றை பொடியாக்கி, அத்துடன் புளிச்சக் கீரை பொடியை சேர்த்து சாப்பிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தவிர இரத்தத்தை விருத்தியாக்கும் தன்மையும் புளிச்சக் கீரைக்கு இருக்கிறது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த புளிச்சக் கீரையை எவ்வாறு தொக்கு வைத்து சாப்பிடலாம் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

புளிச்சக் கீரை,
தனியா,
சீரகம்,
மிளகு,
வெந்தயம்,
நல்லெண்ணெய்,
மிளகாய்கள்,
இஞ்சி,
பெருங்காயம்,
கல் உப்பு மற்றும்
வெங்காயம்

செய்முறை:

Advertisment
Advertisements

இரண்டுக் கட்டு புளிச்சக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், கீரையை ஈரம் இல்லாமல் உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இனி, அடுப்பில்  ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் தனியா, சீரகம், சிறிதளவு மிளகு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இனி, அதே கடாயில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை மிதமான சூட்டில் வறுத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளலாம். இப்போது, கடாயில் 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, 200 கிராம் பழுத்த மிளகாய்கள், 3 துண்டு இஞ்சி, புளிச்ச கீரை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது, அடுப்பில் உள்ள கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து வறுக்க வேண்டும். இதன் பின்னர், தேவையான அளவு கல் உப்பு, தனியா, சீரகம், மிளகு, பெருங்காயம் ஆகியவற்றுடன் புளிச்ச கீரையை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

இந்தக் கலவையுடன் முதலில் அரைத்து வைத்திருந்த வெந்தயப் பொடியை சேர்த்து கலக்க வேண்டும். இப்போது தாளிப்பதற்காக கடாயில் 50 மி.லி நல்லெண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், இரண்டு ஸ்பூன் கடுகு, மூன்று ஸ்பூன் தனியா, சிறியதாக நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் கீரை விழுதை சேர்த்து வதக்கலாம். இப்படி செய்தால் சுவையான புளிச்ச கீரை தொக்கு தயாராகி விடும்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: