/indian-express-tamil/media/media_files/2025/08/22/moringa-thuvayal-2025-08-22-15-01-04.jpg)
முருங்கை கீரையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக, நார்ச்சத்துள்ள முருங்கை கீரையை வைத்து துவையல் செய்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த துவையல் எப்படி செய்வது என்று குக் வித் மாம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உளுந்து - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு - ஐந்து பல்
பச்சை மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
சிறிய வெங்காயம் - பத்து
புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - இரண்டு
முருங்கை கீரை - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - அரை கைப்பிடி
தேங்காய் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர், புளி, காய்ந்த மிளகாய், முருங்கை கீரை, கொத்தமல்லி மற்றும் தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கலவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு உப்பு சேர்த்து ஆறவிடவும். கடைசியாக, இந்தக் கலவையை அம்மியில் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுக்கவும். இந்த துவையலை சூடான சாதத்துடன், சிறிது நெய் சேர்த்து சாப்பிடலாம். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது. முருங்கைக்கீரையில் கலோரிகள் குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து அதிகம் இருப்பதாலும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.
முருங்கைக்கீரையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி முருங்கைக்கீரையில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளன. இவை எலும்புகளைப் பலப்படுத்துவதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும் தருகின்றன. நீரிழிவு நோயாளிகள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.