உளுந்து எலும்புகளை வலுப்படுத்தவும், தசைகளை உறுதியாக்கவும் உதவுகிறது. குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுவாக்குகின்றன. அவ்வளவு சத்துக்கள் நிறைந்த உளுந்தை வைத்து சுவையான உளுந்து பர்பி எப்படி செய்வது இந்தியன் ரெசிப்பீஸ் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
உளுந்து: 1 கப் பொட்டுக்கடலை: அரை கப் வெல்லம்: 2 கப் தண்ணீர்: 1 கப் நெய்: அரை கப் ஏலக்காய் பொடி: அரை டீஸ்பூன்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் ஒரு கப் உளுந்தை சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும். உளுந்து நிறம் மாறியதும், அதனுடன் அரை கப் பொட்டுக்கடலையை சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
வறுத்த பொருட்களை ஒரு தட்டில் பரப்பி, நன்கு ஆறவிடவும். ஆறியதும், உளுந்து மற்றும் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து பொடியாக்கவும். வேறொரு கடாயில் 2 கப் வெல்லம் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் முழுமையாக கரையும் வரை அதிக தீயில் சூடாக்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
ஒரு அடிகனமான கடாயில் அரை கப் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும், அரைத்த உளுந்து-பொட்டுக்கடலை பொடியை சேர்த்து, ஒரு நிமிடம் நன்கு வறுக்கவும். விருப்பப்பட்டால், அரை டீஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
வடிகட்டிய வெல்லப்பாகை வறுத்த பொடியுடன் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். இந்தக் கலவையை மிதமான தீயில் வைத்து, அல்வா பதம் வரும் வரை அல்லது கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறவும்.
கலவை நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து, சிறிது நேரம் ஆறவிடவும். ஒரு வெண்ணெய் தடவிய காகிதத்தில் (Butter Paper) ஆறிய கலவையை கொட்டி, சமமாகப் பரப்பவும். காகிதத்தைப் பயன்படுத்தி, இந்தக் கலவையை ஒரு உருளை வடிவில் சுருட்டவும்.
உருட்டிய பர்பியை 1 முதல் 2 மணி நேரம் குளிரூட்டவும். நன்கு செட் ஆனதும், சிறு துண்டுகளாக வெட்டி சுவையான உளுந்து பர்பியைப் பரிமாறவும். இந்த உளுந்து பர்பி மிகவும் சத்தானது. இதில் வெல்லத்திற்குப் பதிலாக சர்க்கரை அல்லது கருப்பு உளுந்தையும் பயன்படுத்தலாம். தயாரான பர்பி மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.