எப்பவுமே ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் ஹெல்தியா, டேஸ்டியா உங்க வீட்ல எல்லாருமே விரும்பி சாப்பிடுற மாதிரி ஒரு காலை உணவு செய்ய ஆசைப்படுறீங்களா? அப்போ இந்த ரெஸிபியை ட்ரை பண்ணுங்க..
தேவையான பொருட்கள்:
பச்சைப்பயிறு - 1/2 கப்
கருப்பு உளுந்து- 1/2 கப்
பாசிப்பயிறு- 1/2 கப்
வெந்தயம் - 1ஸ்பூன்
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கழுவி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஒரு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் இல்லாமல் ஊறவைத்ததை மட்டும் கொட்டி அதனுடன் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்கவும்.
சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக நீர் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அதில் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து எப்போதும் போல தோசை சுட்டு சாப்பிடலாம்.
இந்த தோசைக்கு சட்னி, சாம்பார் அசைவ குழம்பு எது வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். அதிக புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ள காலை உணவுக்கு இது சிறந்த தேர்வாகும். மேலும் இதில் வெங்காயம் சேர்த்து வெங்காய தோசை மாதிரியும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“