முருங்கை கீரை சூப் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று டாக்டர் சிவராமன் கூறிய நிலையில் இயற்கை வாழ்வியல் யூடியூப் பக்கத்தில் முருங்கை சூப் செய்துள்ளனர்.
Advertisment
முருங்கை கீரையில் உள்ள சில ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முருங்கை கீரையில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. பொட்டாசியம் உடலில் உள்ள சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
முருங்கை கீரையில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல்வேறு ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கும் நீரிழிவுக்கும் தொடர்பு இருப்பதால், இது மறைமுகமாக இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை பூண்டு சின்ன வெங்காயம் சீரகம் மிளகுத்தூள் மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் எலுமிச்சை சாறு
செய்முறை:
முருங்கை கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் முருங்கை கீரை, நறுக்கிய பூண்டு,
சின்ன வெங்காயம், சீரகம், மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். சூப்பை வடிகட்டி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அவ்வளவு தான் சூப் ரெடியாகிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.