தாங்க முடியாத குதிகால் வலியா? அரிசி கழுவிய தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் ராஜகோபால கிருஷ்ணன்

பலருக்கும் தூங்கி எழுந்ததும் குதிகாலில் வலி இருக்கும். அந்த வலி போக டாக்டர் ராஜகோபால கிருஷ்ணன் வீட்டுக் குறிப்பு ஒன்றை பரிந்துரைத்துள்ளார்.

பலருக்கும் தூங்கி எழுந்ததும் குதிகாலில் வலி இருக்கும். அந்த வலி போக டாக்டர் ராஜகோபால கிருஷ்ணன் வீட்டுக் குறிப்பு ஒன்றை பரிந்துரைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
குதிகால்

உடல் எடை அதிகமானவர்கள், நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதிக நேரம் நின்று கொண்டு பணியாற்றுபவர்கள், புதிதாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு குதிகால் வலி ஏற்படும் என டாக்டர் ராஜகோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு தூங்கி எழுந்ததும் குதிகாலில் கடுமையான வலி ஏற்படும். நீண்ட நேரம் அமர்ந்து இருந்த பின்னர், திடீரென எழுந்து நடக்கும் போது  சிலருக்கு குதிகால் வலி இருக்கும். இந்த பிரச்சனையை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என மருத்துவர் ராஜகோபால கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

தூங்கி எழுந்து கொஞ்ச தூரம் நடக்கும்போது, வலி ரொம்ப இருக்கிறது என்று சொல்வார்கள். அப்புறம், கொஞ்ச நேரம் ஆன பிறகு வலி குறையும். அப்புறம் பழையபடி மாலையில் வலிக்கத் தொடங்கிவிடும். ஒரு சின்ன முள்ளு மாதிரி உருவாகி அது போய் கீழ் இருக்கிற சதைப் பகுதியைக் குத்திக்கொண்டே இருக்கும். 

நிறைய பேருக்கு குதிகால் வலி இருக்கும். அவர்கள் எளிய முறையில் வீட்டு வைத்தியம் மூலம் எப்படி குதிகால் வலியை சரி செய்யலாம் என்று நலம் விரும்பி யூடியூப் பக்கத்தில் டாக்டர் ராஜா கோபாலகிருஷ்ணன் கூறுவது பற்றி பார்ப்போம். 

Advertisment
Advertisements

யூரிக் ஆசிட் உடம்பில் அதிகமாக இருப்பதால் தான் இந்த குதிகால் வலி ஏற்படுகிறது. இதனால் கீழே கால் வைக்க முடியாத நிலை ஏற்படும் காலையில் எழுந்ததும் நல்ல வலி, எரிச்சல், குத்தும் உணர்வு இருக்கும். 

டிப்ஸ் 1: அரிசி கழுவிய தண்ணீரை எடுத்து புளிக்க வைத்து அதில் சுக்கு, ஓமம், எலுமிச்சை பழம் சாறுஅரை ஸ்பூன், கல் உப்பு ஆகியவற்றை அரிசி தண்ணீரில் போட்டு சூடு செய்து ஒரு 20 நிமிடம் அதில் கால் வைத்து விட்டு பின்னர் படுக்கலாம். அடுத்த நாள் காலையில் வலி குறைவது நன்றாக பார்க்க முடியும்

டிப்ஸ் 2: குதிகால் எலும்பினுடைய முள் குத்தி குதிகாலினுடைய சதைகள் புண்ணாகி போயிருக்கும். அதை மாற்றக்கூடிய உணவுப் பொருளாக செவ்வாழைப் பழம் இருக்கிறது. இதையும் சாப்பிடலாம். 

டிப்ஸ் 3: ஒரு தண்ணீர் பாட்டிலை நீண்ட நேரமாக ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, பின்னர் அதை பாதங்களில் வைத்து உருட்டினால் வலி சற்று குறையும். காலை நேரத்தில் தூங்கி எழுந்ததும் இந்த பயிற்சியை சுமார் 3 நிமிடங்கள் மேற்கொள்ளலாம். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: