/tamil-ie/media/media_files/uploads/2022/05/maida-1200.jpg)
நீங்கள் தினமும் பயன்படுத்துவதற்காக வீட்டு சமையலறையில் கோதுமை மாவு, கடலை மாவு, மைதா மாவு, கேழ்வரகு மாவு போன்றவற்றை ஸ்டோர் செய்து வைத்திருப்போம். ஆனால், அவற்றை நீண்ட காலம் வைக்கும் போது, புழு, பூச்சி போன்றவை வருவது வழக்கம். இது இல்லதரசிகளுக்கு மிகுந்த சிக்கலான ஒன்றாகும். ஆனால், அத்தகைய மாவில் இந்த பொருளை போட்டு வைத்தால், வண்டு விழாமல் இருக்கும். அதனை குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
முதலில் எந்த மாவாக இருந்தாலும், அதில் கொஞ்சமாக கல் உப்பை போட்டு கலந்து வைத்தால் எந்த ஒரு பூச்சியும் வராது. இது பெரும்பாலான இல்லத்தரிசகளுக்கு தெரிஞ்ச ட்ரிக் என்றாலும், மிளகிற்கும் அத்தகைய தன்மை உள்ளது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டீர்கள். மிளகில் பூச்சி பிடிக்காமல் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். அதனை, மாவில் போட்டு பாதுகாக்கும் வழிமுறையை தான் பார்க்கப்போகிறோம்.
1 கிலோ அளவு கோதுமை மாவு வைத்திருக்கிறீர்கள் என்றால், 10 மிளகை அதில் தூவி கலந்துகொள்ள வேண்டும். குறிப்பு, கோதுமை மாவில் மிளகு கலந்தால், சப்பாத்தி செய்யும் போது, மாவு எப்படி பிசைவது என குழப்பம் வரலாம். அப்போது, சப்பாத்திக்கு தேவையான மாவை எடுத்துவிட்டு, அதில் தூவியிருக்கும் மிளகை எடுத்து, மீண்டும் கோதுமை டப்பாவில் போட்டுவிட வேண்டும்.
இல்லையெனில், மெல்லிசான காட்டன் துணியில் 10 மிளகுகளை வைத்து கட்டி, அதனை அப்படியே கோதுமை மாவில் புதைத்து வைக்கலாம். நிறைய மாவை ஸ்டோர் செய்துவைக்கும் பட்சத்தில், 5 அல்லது 6 முடிச்சுகளை தயார் செய்து மாவு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும்.
இதே முறையை கடலை மாவு, மைதா மாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.