/indian-express-tamil/media/media_files/2025/01/27/ocKJmSUv8pscX4B5YLca.jpg)
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் தினமும் ஒரு வேளையாவது இட்லி தோசை உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. உணவு வகையில் முக்கியமான பங்களிப்பை கொடுக்கும் இந்த உணவுகள் செய்வதற்கு அதிகம் நேரம் எடுக்காது. மேலும் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் இந்த உணவை செய்வதற்கு தேவையான மாவை அரைக்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இதில் நகர்புறத்தில் ஒரு வாரத்திற்கு தேவையான மாவை மொத்தமாக அரைத்து வைத்துக்கொள்வது வழக்கம். அப்படி அரைக்கும் பொழுது முதல் 3 நாட்களில் புளிக்காமல் இருக்கும் மாவு அடுத்தடுத்த நாட்களில் அதிக புளிப்புத்தன்மை ஏற்பட்டு சில சமையங்களில் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். ஆனால் சில செயல்முறைகளை பின்பற்றினால் மாவை புளிக்காம வைத்து பயன்படுத்தலாம்.
டிப்ஸ் 1: மாவை அரைத்து தனித்தனியாக தேவைப்படும்போது புளிக்க வைக்கலாம். காலை மாவு தேவை என்றால் முன்னாடி நாள் இரவு மாவை வெளியில் வைத்து புளிக்க வைக்கலாம்.
டிப்ஸ் 2: மாவை அடித்து இட்லி ஊற்றாமல் மேலாக இருக்கும் மாவை எடுத்து இட்லி ஊற்றலாம்.
டிப்ஸ் 3: அதன்பிறகு மாவை கைகள் படாமல் தேவையான அளவிற்கு உணவிற்கு எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள மாவை உப்பு சேர்க்காமல், பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். மீண்டும் காலையில் எழுந்தவுடன் வெளியில் வைத்தால் போதும். நீங்கள் இட்லி சுடுவதற்கு மாவு தேவையான பதத்திற்கு புளித்திருக்கும்.
இப்படி செய்யும் பொழுது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவும், வெளியில் வைத்த மாவு கொஞ்சம் கூட புளிக்காது. இதில் உப்பு கலக்காத மாவை தேவையான பொழுது தோசைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.