காய்ச்சல் நேரத்தில் பொதுவாகவே சோர்வாக உடலில் சத்து இல்லாமல் இருப்போம். அந்த நேரத்தில் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய் ஒன்றை பற்றி மருத்துவர் ஷர்மிகா கூறியிருப்பதாவது,
நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காயை மாதத்திற்கு நான்கு முறை வாரத்தில் இரண்டு முறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் மருத்துவர் ஷர்மிகா.
சுண்டைக்காயில் கால்சியம், புரதம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் உள்ளன.
இது ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றி அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க உதவும். சுண்டைக்காயில் பினைல்கள், குளோரோஜெனின்கள் உள்ளதால் இவை இரைப்பையில் ஏற்படும் அழற்சி, கணையத்தில் ஏற்படும் புண்களை குறைக்கும்.
அதுமட்டுமின்றி சுண்டைக்காயில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
இது செரிமானத்தை தூண்டி எடையை குறைக்க உதவும். சுண்டைக்காயில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதனால் ரத்த சோகை நோய் ஏற்படாது. அதேபோல ரத்த சோகை எனப்படும் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்களும் சுண்டைக்காயை சாப்பிட்டால் விரைவில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
One Amazing Vegetable You Can Include In Your Daily Meals !
சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த தீர்வு என்றே கூறலாம். இன்சுலின் உற்பத்தி மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை கட்டுப்படுத்த உதவும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராமல் கட்டுப்படுத்தும்.
உயர் ரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஆண்டி வைரல் பண்புகள் இருப்பதால் காய்ச்சலையும் குணமாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.