கடுமையான வலியால் பாதிக்கப்படுபவர்கள் பிரண்டையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும், இதன் மருத்துவ குணம் குறித்தும் தற்போது பார்க்கலாம்.
கடுமையான வலியால் பாதிக்கப்படுபவர்கள் பிரண்டையை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும், இதன் மருத்துவ குணம் குறித்தும் தற்போது பார்க்கலாம்.
சிலருக்கு கை, கால் பகுதிகளில் கடுமையான வலி இருக்கும். நம்முடைய அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவிற்கு இந்த வலி அதிகமாக இருக்கும். குறிப்பாக, சிக்குன்குனியா போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் தாக்கம் புரியும்.
Advertisment
இது போன்ற வலிகளை குறைக்க பிரண்டையை உணவாக எடுத்துக் கொள்ளலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில், இயற்கையாகவே வலி நிவாரணியாக செயல்படக் கூடிய ஆற்றல் பிரண்டைக்கு இருக்கிறது.
அந்த வகையில், கடுமையான வலியால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் கை, கால் வலியையும் குணப்படுத்தும் ஆற்றல் பிரண்டைக்கு இருக்கிறது.
அதன்படி, பிரண்டையை சுத்தப்படுத்தி விட்டு நன்றாக வதக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு கப் கடலை பருப்பு மற்றும் ஒரு கப் உளுந்தை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம். இதையடுத்து மல்லி, சீரகம், மிளகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் புளி ஆகிய அனைத்தையும் வறுத்து எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இவற்றை பிரண்டையுடன் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும். இந்தப் பொடியை சற்று நல்லெண்ணெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிடலாம். மேலும், தோசையுடன் சேர்த்தும் சாப்பிடலாம். இதில் இருக்கும் அதிகப்படியான மருத்துவ குணங்கள், கை, கால் வலிகளை பெருமளவு குறைக்கும்.
நன்றி - TamilNadu Common Man Kazhagam(TacMak) Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.