/indian-express-tamil/media/media_files/2025/05/25/WxNfV7cUrIBJSDuThuVO.jpg)
தும்பை செடியில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அதாவது, நிலத்தும்பை, கொடித்தும்பை, செந்தும்பை, பெருந்தும்பை போன்று பவ்வேறு வகைகளில் இவை காணப்படுகின்றன. இது போன்ற தும்பை மூலிகை பெரும்பாலான இடங்களில் மிகவும் சாதாரணமாக கிடைக்கக் கூடியது. ஆனால், இவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தும்பைச் செடி தொடர்பான பல தகவல்கள் நியூஸ்7 தமிழ் யூடியூப் சேனலில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை, இக்குறிப்பில் காணலாம். எந்த விதமான விஷப்பூச்சிகளின் கடிக்கும் தும்பைச் செடியை மருந்தாக பயன்படுத்தலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தும்பையின் முழு செடியும் மருத்துவ குணம் வாய்ந்தது. அதன்படி, மூன்று தும்பை இலைகள், மூன்று மிளகுகள், மூன்று சிட்டிகை மஞ்சள் ஆகிய அனைத்தையும் பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இந்த மருந்தை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் தொடர்பான பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
தும்பை இலையை 50 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் சீரகம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, வால்மிளகு ஆகிய அனைத்தையும் பொடியாக்கி 2 கிராம் அளவில் பாலில் கலந்து குடித்தால் தலை சம்பந்தமான அத்தனை வியாதிகளும் குணமாகும்.
மேலும், தும்பை இலை சாறுடன் கருஞ்சீரகத்தை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் குறட்டை விடும் பிரச்சனையைக் குறைக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர பாம்பு விஷத்தை முறிக்கும் ஆற்றல் தும்பை செடிக்கு இருக்கிறது.
பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தும்பை இலை சாறை ஒரு அவுன்ஸ் கொடுத்தால், பாம்பு விஷத்தை முறிக்கலாம் என்று கூறுகின்றனர். அந்த வகையில், இத்தனை நன்மைகள் அளிக்கக் கூடிய தும்பை இலையை, அதன் தன்மை அறிந்து எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.