வயிற்றுப் புழுக்களை அழிக்கும்... இந்தக் கீரையில் டேஸ்டி துவையல்; இப்படி செஞ்சு பாருங்க!
சுவையான மற்றும் சத்தான புதினா துவையல் எப்படி செய்ய வேண்டும் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இவை வயிற்றுப் புழுக்களை அழிக்கும் என்று கூறப்படுகிறது.
சுவையான மற்றும் சத்தான புதினா துவையல் எப்படி செய்ய வேண்டும் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இவை வயிற்றுப் புழுக்களை அழிக்கும் என்று கூறப்படுகிறது.
உணவு என்பது சுவைக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் வயிற்றுப் புழுக்களை அழிக்கும் ஆற்றல் புதினாவில் இருக்கிறது. இது தவிர வயிற்று வலி, வாய்வுத் தொல்லை, வீக்கம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளுக்கு இது உடனடி நிவாரணம் அளிக்கிறது. புதினாவில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வயிற்றில் ஏற்படும் எந்த வீக்கத்தையும் குறைக்க உதவும்.
Advertisment
சளி, இருமல், ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு புதினா ஒரு சிறந்த தீர்வாகும். புதினா இலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வாயில் உள்ள கிருமிகளை அழிக்க உதவுகின்றன. இது ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், பற்களை வலுப்படுத்தவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கி சுவாசத்தைப் புத்துணர்ச்சியாக்கவும் உதவுகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாவில் இருந்து எவ்வாறு சுவையான துவையல் செய்யலாம் என்று இதில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
எண்ணெய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், புளி, பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கடுகு.
செய்முறை:
அடுப்பில் இருக்கும் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு டீஸ்பூன் தனியா, 6 காய்ந்த மிளகாய், கால் டீஸ்பூன் சீரகம், சிறிதளவு புளி, மூன்று பச்சை மிளகாய், சிறிது இஞ்சி ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.
இவற்றை வதக்கும் போது, ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கொத்து கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்க வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்து விடலாம். இனி, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பெரிய கட்டு புதினாவை தனியாக வதக்க வேண்டும்.
இதையடுத்து, முதலில் தயாரித்து வைத்திருந்த மசாலா பொருட்கள், புதினா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனிடையே, கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய்யில், ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, 5 மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இறுதியாக அரைத்து வைத்திருக்கும் புதினாவை இதில் கலந்தால் சுவையான துவையல் தயாராகி விடும்.