உடல் சூட்டை தணிக்கும்... வெயில் நேரத்துக்கு இந்த குளு குளு டிரிங்க்; பச்சை பயிறு வச்சு இப்படி செய்து பாருங்க!
கோடை காலத்தில் நம்முடைய உடல் சூட்டை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பச்சை பயிறு பால் செய்முறையை இதில் காணலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.
கோடை காலத்தில் நம்முடைய உடல் சூட்டை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பச்சை பயிறு பால் செய்முறையை இதில் காணலாம். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும்.
மங்களூரு ஸ்பெஷல் பச்சை பயிறு டிரிங்க் எவ்வாறு செய்ய வேண்டும் என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம். இது வெயில் காலத்தில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி செய்கிறது. மேலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு, தேங்காய், ஏலக்காய், பாதாம் பருப்பு, உப்பு, தண்ணீர் மற்றும் சப்ஜா விதை
செய்முறை:
Advertisment
Advertisements
அடுப்பில் கடாயை சூடுபடுத்தி ஒரு கப் அளவிற்கு பச்சை பயிறை சேர்க்க வேண்டும். இதன் நிறம் மாறும் வரை நிதானமான சூட்டில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். பயிறின் நிறம் மாறியதும் வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு ஆறவைக்க வேண்டும்.
பச்சை பயிறு சூடு ஆறியதும் அத்துடன் ஒரு கப் துருவிய தேங்காய், ஒரு கப் வெல்லம், 4 ஏலக்காய், கால் கப் பாதாம் பருப்பு, ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.
இதில் இருந்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளலாம். இதையடுத்து, இந்த சக்கையை மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து, அதில் இருந்து பால் எடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை வடிகட்டி பச்சை பயிறு பால் எடுக்க வேண்டும்.
இந்தப் பாலை இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும். இறுதியாக, சிறிதளவு சப்ஜா விதைகள், சிறிய துண்டு ஐஸ்கட்டி சேர்த்து பச்சை பயிறு பாலை பரிமாறலாம். இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.