முருங்கை இலை என்றாலே அதிக மருத்துவ பயன்கள் நிறைந்தது. அதிலும் முருங்கைபூ கண்பார்வை தெளிவாக மாதவிடாய் நாட்களில் வரும் எரிச்சல் உணர்வு, வலி ஆகியவை போக்க மிகவும் உதவுகிறது. அப்படிப்பட்ட முருங்கை பூவை வைத்து ரசம் ஸ்டைலில் ஒரு முருங்கை பூ சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பூண்டு
கருவேப்பிலை
மிளகு
சீரகம்
பச்சை மிளகாய்
எண்ணெய்
கடுகு கருவேப்பிலை வெந்தயம் காய்ந்த மிளகாய்
முருங்கை பூ
மஞ்சள் தூள்
தக்காளி
கொத்தமல்லி தழை
புளிகரைசல்
பெருங்காயத்தூள்
செய்முறை
பூண்டு, கருவேப்பிலை, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் அனைத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின்னர் ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து முருங்கைப்பூ சேர்த்து வதக்கவும்.
முருங்கைப்பூ ரசம்
வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் அரைத்த பொடியை சேர்க்கவும். இதில் புளி கரைசல் உப்பு, பெருங்காயத்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து மேலே கொத்தமல்லி தழைகளை தூவி கொதிவிட்டு இறக்கினால் போதும் முருங்கை சூப் ரெடியாகிவிடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“