முருங்கை கீரை துவையல் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் இரத்தத்தின் அளவு நன்றாக ஊறும் எனக் கூறப்படுகிறது. இதனை செய்வதற்காக ஒரு இரும்பு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து 3 காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
அதன்பின்னர், 6 பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய், இரண்டு நறுக்கிய பெரிய வெங்காயம், 4 சின்ன வெங்காயங்கள், கொஞ்சம் தேங்காய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இதையடுத்து, சிறிய அளவு புளியுடன் இரண்டு கைப்பிடி அளவு முருங்கை கீரை மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து வதக்க வேண்டும்
பின்னர், இவை நன்றாக ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு அரைக்க வேண்டும். அதன்பின்னர், கடுகு மற்றும் சீரகத்தை தாளித்து எடுத்தால் முருங்கை துவையல் தயாராகி விடும்.