இந்தக் கீரையில் கொஞ்சம் துவையல் சாப்பிடுங்க; மூட்டு வலி பறந்து போகும்: டாக்டர் சிவராமன்

வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ள முடக்கத்தான் கீரையை சாப்பிடலாம். மேலும் இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த முடக்கத்தான் கீரை இருப்பதாகவும் டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ள முடக்கத்தான் கீரையை சாப்பிடலாம். மேலும் இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த முடக்கத்தான் கீரை இருப்பதாகவும் டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
mudakkaththaan keerai

முதியோர்களின் நண்பனாக இருக்கும் முடக்கத்தான் கீரை பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கிறது. வாதம் தொடர்பாக ஏற்படும் முடக்குகளை அறுக்கும் திறன் கொண்டுள்ளதாலேயே இது முடக்கத்தான் என்று அழைக்கப்படுகிறது.

Advertisment

இதற்கு கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை போன்ற பல பெயர்களையும் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட முடக்கத்தான் கீரையை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோரும் சாப்பிடலாம் என்று டாக்டர் சிவராமன் ஹெல்த் பாஸ்கெட் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.

இது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், மூச்சுத்திணறல் , சுவாசப்பாதையில் தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு பலன் தருவதால் கேரளாவில் முடக்கத்தான் கீரை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நைஜீரியாவில் தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. முதியவர்களுக்கு வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மூட்டுவலி பிரச்சனைக்கு முடக்கத்தான் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

டிப்ஸ் 1: முடக்கத்தான் கீரை பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர மூட்டு வலி, உடல் வலி குறையும். முடக்கத்தான் பொடியை முட்டை வெள்ளை கருவில் கலந்து நன்கு பேஸ்ட் போல் குழைத்து அதை வீக்கமுள்ள மூட்டு பகுதியில் தடவ வலி சற்று குறையலாம்.

Advertisment
Advertisements

டிப்ஸ் 2: இதை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக முடக்கத்தான் கீரையை காய வைத்து பொடி செய்து தோசை ஊற்றி சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும், அதே நேரத்தில் சத்துள்ளதாகவும் இருக்கும் என்று  மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை 
உளுந்து
வர மிளகாய்
தேங்காய் துருவல்
புளி
உப்பு
கடுகு
கறிவேப்பிலை

செய்முறை
முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, வரமிளகாயை வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உளுந்து சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து அதை கடாயில் தனியாக எடுத்து வைக்கவும். 

அதே கடாயில் முடக்கத்தான் கீரையை வதக்கி அதில் தேங்காய் துருவல், புளி சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து தனியாக வைக்கவும். 

அனைத்தையும் ஆறவைத்து உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலில் சேர்க்க வேண்டும்.

இதை சூடான சாதத்தில் கொஞ்சம் நெய்விட்டு பிசைந்து சாப்பிடலாம். இதை சாம்பார், ரசம், தயிர், வத்தக்குழம்பு மற்றும் அனைத்து வெரைட்டி ரைஸ்களுடனும் சாப்பிடலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

bone health

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: