இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மன அழுத்தம், தவறான உணவு பழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் பலர் இந்தப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மருந்துகளை மட்டுமே சார்ந்திருக்காமல், இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த வல்லுநர்கள் இரண்டு எளிய காய்கறிகளை பரிந்துரைக்கின்றனர். இவை எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
காலை வேளையில் கோவக்காயை உங்கள் உணவுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். சுமார் 5 கோவக்காய்களை நன்கு கழுவி, பச்சையாக மென்று சாப்பிடலாம். கோவக்காய் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் கூறுகின்றனர். இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது.
மாலை நேரத்தில், குறிப்பாக சுமார் 4 மணி அளவில், இளசாக இருக்கும் வாழைக்காயை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். வாழைக்காயை சாறாக அருந்தலாம் அல்லது பச்சையாக மென்று சாப்பிடலாம். வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து, இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த இரண்டு காய்கறிகளையும் தொடர்ச்சியாக உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை திறம்படக் கட்டுப்படுத்த முடியும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவை இரண்டும் இயற்கையான உணவு பொருட்கள் என்பதால் பக்கவிளைவுகளும் ஏற்படுவதில்லை.
எனினும், ஏற்கனவே இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், இந்த முறையை பின்பற்றுவதற்கு முன் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும். இயற்கையான வழிமுறைகள் என்றாலும், தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.