நெல்லையில் மிகவும் ஃபேமசாக இருக்கும் எள்ளு பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
இட்லி பொடி, தோசை பொடி என பல பொடி கேள்விப்பட்டிருப்போம். செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் எள்ளு பொடி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லையென்றால் இட்லி தோசைக்கு ஏற்ற எள்ளு பொடி செஃப் வெங்கடேஷ் ஸ்டைலில் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டிருக்கிறார் அதன்படி நாமும் செய்வோம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் பூண்டு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை கருப்பு உளுந்து புளி உப்பு பெருங்காய்த்தூள் கருப்பு எள் நாட்டுச் சர்க்கரை
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு சிவந்து வந்ததும் மிதமான சூட்டில் வைத்து பூண்டு நன்கு சிவந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அதனை தனியாக எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு இதனையும் நன்றாக வதக்கவும். பின்னர் அதில் கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். இவற்றையும் தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் கருப்பு உளுந்து சேர்த்து வறுக்கவும்.
இதில் புளி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இவற்றில் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும். அதேபோல அந்த பேனில் கருப்பு எள் சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் முதலில் வறுத்த இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஆறவைத்து நாட்டுச்சர்க்கரை சேர்த்து அரைக்க வேண்டும்.
கொரகொரப்பாக அரைந்ததும் அதில் வறுத்து வைத்துள்ள எள்ளையும் சேர்த்து மைய அரைத்து எடுத்து உலர்த்தி சூடு ஆறவிட்டால் அவ்வளவுதான் தோசை இட்லிக்கு சூப்பரான எள்ளு பொடி ரெடி ஆகிடும்.