/indian-express-tamil/media/media_files/2025/06/12/CLm0BXvDLmlKmV4DXq4e.jpg)
டிபன் பாக்ஸுக்கு இட்லி கொடுத்து அனுப்பினால், சில சமயம் குழந்தைகள் சாப்பிடாமல் கொண்டு வந்துவிடுவார்கள். ஆனால், இந்த "புசுபுசு கலர் இட்லி"யை கொடுத்து அனுப்பினீர்கள் என்றால், ஒரு துளி கூட மீதி ஆகாது.பார்க்கவும் அழகாக, சாப்பிடவும் சுவையாக இருக்கும் இந்த இட்லியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
பீட்ரூட் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
காரட் ஜூஸ் - 2 டேபிள்ஸ்பூன்
கீரை ஜூஸ் (பாலக் அல்லது சிறுகீரை) - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - இட்லி தட்டில் தடவ
செய்முறை:
இட்லி மாவை மூன்று சம பாகங்களாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பாகத்தில் பீட்ரூட் ஜூஸ் சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு பாகத்தில் காரட் ஜூஸ் சேர்த்து கலக்கவும். கடைசி பாகத்தில் கீரை ஜூஸ் சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால், ஒவ்வொரு மாவிலும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, முதலில் வெள்ளை மாவின் ஒரு அடுக்கை ஊற்றவும். அதன் மேல் பீட்ரூட் கலந்த மாவு, பிறகு காரட் கலந்த மாவு, கடைசியாக கீரை கலந்த மாவு என அடுக்குகளாக ஊற்றவும். (அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ப நிறங்களை மாற்றிக் கொள்ளலாம்). இட்லி பாத்திரத்தில் வைத்து 8-10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். மேலே நட்ஸ் தூவி கொடுத்தாலும் சுவையாக இருக்கும். இதை பாலில் கூட தொட்டு சாப்பிடலாம்.
ஜூஸ் சேர்க்கும்போது மாவு ரொம்ப நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை கவர, இட்லி மாவை கார்ட்டூன் வடிவ அச்சுகளில் ஊற்றி செய்யலாம். இந்த இட்லிக்கு தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது தக்காளி சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
காய்கறி ஜூஸ்களுக்கு பதிலாக பன்னீர், பவுடர் போன்றவற்றையும் கலர் இட்லிக்கு பயன்படுத்தலாம். இந்த வண்ணமயமான இட்லிகள் குழந்தைகளின் கண்களையும், வயிறையும் ஒரே நேரத்தில் நிரப்பும். டிபன் பாக்ஸ் காலியாக வீடு திரும்புவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.