இட்லிக்கு மாவு அரைப்பது என்பது சவாலான ஒன்று தான். அதனாலேயே பலரும் இட்லி மாவு அரைப்பது இல்லை. கடைகளில் மாவு வாங்கி பயன்படுத்தி கொள்கிறார்கள்.
Advertisment
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலும் தினமும் ஒரு வேளையாவது இட்லி தோசை உணவாக உட்கொள்ளும் பழக்கம் இருந்து வருகிறது. உணவு வகையில் முக்கியமான பங்களிப்பை கொடுக்கும் இந்த உணவுகள் செய்வதற்கு அதிகம் நேரம் எடுக்காது. மேலும் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் இந்த உணவை செய்வதற்கு தேவையான மாவை அரைக்கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இதில் நகர்புறத்தில் ஒரு வாரத்திற்கு தேவையான மாவை மொத்தமாக அரைத்து வைத்துக்கொள்வது வழக்கம். இப்படி மாவு அரைக்கும் போது கவனிக்க வேண்டிய சிலவற்றை பற்றி கை மனம் மீனாட்சி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
வெயில்காலம் என்பதால் மாவு சீக்கிரம் புளித்து விடும் கல் மாதிரி வரும். அப்படி வராமல் சாஃப்ட் பஞ்சு மாதிரியான இட்லி வருவதற்கு சில டிப்ஸ்களை பார்ப்போம்.
Advertisment
Advertisements
டிப்ஸ்1 :உளுந்து எப்போதும் போல போட்டு ஒரு கப் அரிசி கூடுதலாக சேர்த்து கொள்ளலாம். இல்லை என்றால் அரிசி அதே அளவு போட்டு உளுந்து தலை தட்டி சேர்க்கலாம்.
டிப்ஸ் 2: மாவை அரைத்து தனித்தனியாக தேவைப்படும்போது புளிக்க வைக்கலாம். காலை மாவு தேவை என்றால் முன்னாடி நாள் இரவு மாவை வெளியில் வைத்து புளிக்க வைக்கலாம்.
டிப்ஸ் 3: மாவை அடித்து இட்லி ஊற்றாமல் மேலாக இருக்கும் மாவை எடுத்து இட்லி ஊற்றலாம்.
டிப்ஸ் 4: அதன்பிறகு மாவை கைகள் படாமல் தேவையான அளவிற்கு உணவிற்கு எடுத்து வைத்து விட்டு மீதமுள்ள மாவை உப்பு சேர்க்காமல், பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். மீண்டும் காலையில் எழுந்தவுடன் வெளியில் வைத்தால் போதும். நீங்கள் இட்லி சுடுவதற்கு மாவு தேவையான பதத்திற்கு புளித்திருக்கும்.
இப்படி செய்யும் பொழுது ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரிட்ஜில் இருக்கும் மாவும், வெளியில் வைத்த மாவு கொஞ்சம் கூட புளிக்காது. இதில் உப்பு கலக்காத மாவை தேவையான பொழுது தோசைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.