வயிற்றை க்ளீன் பண்ணும் இந்தக் கீரை... இப்படி சாறு எடுத்து குடிங்க: டாக்டர் ராஜலட்சுமி
மணத்தக்காளி கீரையில் இருந்து எவ்வாறு சாறு தயாரித்து பருக வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மணத்தக்காளி கீரையில் இருந்து எவ்வாறு சாறு தயாரித்து பருக வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீரை வகைகளின் நன்மைகள் குறித்து நம்மிடையே பலருக்கும் தெரியும். குறிப்பாக, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து நாம் அறிவோம்.
Advertisment
ஆனால், மணத்தக்காளி கீரையின் மகத்துவம் குறித்து பலருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகளை மருத்துவர் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, இதில் இருந்து சாறு தயாரித்து குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
மணத்தக்காளி கீரையின் சாறை தொடர்ச்சியாக 48 நாட்களுக்கு குடிக்க வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி பரிந்துரைக்கிறார். குறிப்பாக, அதன் காய், கனி, இலைகள் மற்றும் வேர் என அனைத்தையும் பறித்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று அல்லது நான்கு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் முக்கால் கிளாஸ் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர் ராஜலட்சிமி கூறுகிறார்.
Advertisment
Advertisements
அதன் பின்னர், இந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதால் நம்முடைய சருமம் பொலிவாக மாறும் என்று மருத்துவர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், நம்முடைய வயிற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் மணத்தக்காளி கீரையில் இருந்து எடுக்கும் சாறில் இருப்பதாக அவர் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.