கீரை உள்ளே இருக்கிற தண்ணீரை வைத்தே வேக வைக்கணும்: வெங்கடேஷ் பட் ஸ்பெஷல் கீரை மசியல் ரெசிபி
கீரை மசியலை சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அதற்கான ரெசிபியை பார்ப்போம். இதில் முளைக்கீரையை பயன்படுத்தலாம்.
கீரை மசியலை சுவையாகவும், எளிமையாகவும் எப்படி செய்வது என சமையற் கலைஞர் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார். அதற்கான ரெசிபியை பார்ப்போம். இதில் முளைக்கீரையை பயன்படுத்தலாம்.
முதலில் குக்கரில் ஒரு கிளாஸ் பாசிப்பருப்பை, இரண்டு கிளாஸ் தண்ணீரில் 4 விசில் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். அதாவது 600 கிராம் முளைக்கீரைக்கு 100 கிராம் பாசிப்பருப்பு என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கீரையையும் கழுவி, வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி, 10 குண்டு மிளகாய்கள், துருவிய தேங்காய் மற்றும் 100 மி.லீ தண்ணீர் ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதையடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் நேய் ஊற்ற வேண்டும். இதில் 5 காய்ந்த மிளகாய்கள், ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு கொத்து கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது, 4 தோல் நீக்கிய தக்காளிகளையும் இதில் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கும் போது அரை ஸ்பூன் மஞ்சள் தூள், வெட்டி வைத்திருக்கும் முளைக்கீரை இரண்டையும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். இந்தக் கீரை பாதி வேகும் போதே தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்யும் போது அதில் இருந்து வெளியேறும் தண்ணீரிலேயே கீரை வெந்து விடும். இதன் பின்னர், முதலில் அரைத்து வைத்திருந்த மசாலைவை சேர்த்து 2 நிமிடங்கள் கிளற வேண்டும். இதனை கிளறும் போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கலாம். கீரை, மசியல் பதத்திற்கு வந்ததும், முதலில் வேக வைத்திருந்த பருப்பை இதில் சேர்க்க வேண்டும்.
இறுதியாக அடுப்பை ஆஃப் செய்துவிட்டு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து எடுத்தால் கீரை மசியல் தயாராகி விடும்.