சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஏதாவது ரெமிடிஸ் இருக்கா? என்ன சாப்பிடலாம் என்று பலருக்கும் குழப்பம் இருக்கும். அதற்கு என்ன எப்படி சாப்பிட வேண்டும் என்று பலர் தேடி கொண்டு இருப்பவர்களுக்காகவே மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் சித்தா டாக்டர் நித்யா கூறி இருக்கும் தகவல்கள் வருமாறு,
பிரச்சனைகள்: நரம்பு பிரச்சனை, எரிச்சல், உடல் சோர்வு போன்றவை சர்க்கரை நோயாளிகளின் முக்கிய பிரச்சனையாக இருக்கும்.
மூலிகைகள்: ஆவாரம் பூ பொடி, வேப்பம்பூ, கருப்பு துளசி பொடி, வில்வம் இலை பொடி அல்லது அனைத்தும் இலைகளாகவே பயன்படுத்தலாம்.
செய்முறை
இவை இரண்டையும் இலைகளாக கிடைத்தால் வாங்கி காய வைத்து தனித்தனியாக நல்ல பொடி செய்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
முதலில் ஆவாரம் பூவை டீ மாதிரி கசாயம் ரெடி செய்து வடிகட்டி வைக்கவும். பின்னர் இதில் வேப்பம்பூ, கருப்பு துளசி பொடி, வில்வம் இலை பொடிகளை போட்டு குடிக்க வேண்டும்.
HbA1c நல்லா குறையும் கண்ட்ரோல் ஆகும் | Diabetes control Powder | Health tips | Mr Ladies
இவை இரண்டிலும் நிறைய நன்மைகள் உள்ளது. சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் இருந்து தோல் கருமை வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாகும்.
இவற்றை தொடர்ந்து ஒரு மாதம் குடித்துவிட்டு பின்னர் டெஸ்ட் எடுத்து பார்க்கவும். இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பது தெரியும். இதை எப்போதும் எடுத்து கொள்ளலாம். மலச்சிக்கல் பிரச்சனைகளும் சரியாகும். காலை உணவுக்கு அரை மணி நேரம் முன்பாக இதை சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளிலேயே உடல் பருமன் அதிகம் இருப்பவர்களுக்கும் இது நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.