/indian-express-tamil/media/media_files/2025/08/08/pachai-pauay-2025-08-08-18-35-35.jpg)
அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தும் அரிசியுடன், புரதச்சத்து நிறைந்த பச்சை பயிறை சேர்த்து செய்யப்படும் இந்த சாதம், உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. காரசாரமான சுவையும், மணம் மிகுந்த பூண்டும், வெங்காயமும் சேர்ந்து இந்த சாதத்திற்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகின்றன.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1/2 கப்
வரமிளகாய் - 4-5
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 6-8 பல்
வெங்காயம் - 3 (நடுத்தர அளவு)
தண்ணீர் - 3 கப் (அரிசிக்கு 2 கப், பருப்புக்கு 1 கப்)
உப்பு - தேவையான அளவு
அரிசி (சோனா மசூரி) - 1 கப் (ஊறவைத்தது)
செய்முறை:
முதலில், பச்சை பயறு, வரமிளகாய், மிளகு, மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது, அரைத்து வைத்த பச்சை பயறு கலவையை சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கலவை கொதிக்கத் தொடங்கியதும், ஊறவைத்த அரிசியை சேர்க்கவும்.
அரிசியை மெதுவாக கிளறிவிட்டு, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை சமைக்கவும். பிரஷர் முழுமையாக வெளியேறிய பின், குக்கரை திறந்து, சூடாக நெய் சேர்த்து பரிமாறவும். கத்தரிக்காய் வறுவல் இந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.