எண்ணெய் குடிக்காத மெதுவடை செய்வது எப்படி? மாவு அரைக்கும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
முழு உளுத்தம்பருப்பு – ஒரு டம்ளர்
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
Advertisment
Advertisements
வெங்காயம் – 2
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
செய்முறை:
முதலில் உளுத்தப்பருப்பை நன்றாக 2-3 முறை கழுவி எடுத்துக்கொண்டு, அதை அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து ஒரு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து, பிசைந்து, தேவைப்படடால் நறுக்கிய பச்சை மிளகாய் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மாவை நன்றாக பிசைந்து, சிறிது சிறிது உருண்டையாக எடுத்து கையில் தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான மெதுவடை தயார். மாவு அரைக்கும்போது அதிக தண்ணீர் சேர்க்க கூடாது.
உளுந்து பருப்பை அதிகமாக ஊற வைத்தால், வடை எண்ணெய் குடிக்கும். மாவு அரைக்கும்போது அதிக தண்ணீர் சேர்த்தால், வடை மொறுமொறுப்பாக வராது. மெதுவடை செய்யும்போது இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவும்.