/indian-express-tamil/media/media_files/2025/07/03/puliyothara-2025-07-03-23-06-28.jpg)
கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரைக்கு என்றுமே ஒரு தனிச் சுவை உண்டு. அந்த சுவையை வீட்டிலேயே கொண்டு வர வேண்டும் என்ற ஆசையா? அப்படியானால், இந்த ஸ்டைல் கோவில் புளியோதரை" செய்முறை உங்களுக்கானது! எளிமையான முறையில், பிரசாத சுவையுடன் கூடிய புளியோதரை செய்வது எப்படி என்று இங்கே விரிவாகப் பார்ப்போம். இதிலுள்ள ரகசிய மசாலா கலவை, உங்கள் புளியோதரையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை!
தேவையான பொருட்கள்
கறுப்பு எள் - 1 தேக்கரண்டி
வெள்ளை எள் - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் - 5-6
குண்டு மிளகாய் - 4-5
தனியா - 3-4 தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
மிளகு - ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
செய்முறை:
முதலில், மேலே குறிப்பிட்ட "வறுத்து பொடிக்க" தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு வாணலியில் மிதமான தீயில் சேர்க்கவும்.அவற்றை சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
மசாலாப் பொருட்களில் இருந்து நறுமணம் வரத் தொடங்கி, நிறம் சற்று மாறுவதைக் கவனிக்கலாம். கருக விடாமல் கவனமாக வறுக்கவும். வறுத்த மசாலாப் பொருட்களை ஒரு தட்டில் பரப்பி, நன்றாக ஆறவிடவும். ஆறிய பிறகு, மிக்ஸியில் சேர்த்து, நைசான பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதுவே உங்கள் புளியோதரைக்கு தெய்வீக சுவையைக் கொடுக்கும் முக்கிய மசாலா பொடி.
அடுத்து ஒரு பெரிய பானில், நல்லெண்ணெய் சேர்த்து, தேவையான அளவு புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைத்து, அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை 5 டீஸ்பூன் சேர்த்து கெட்டியாக வரும்வரை கொதிக்க விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, இதனை கொதிக்க வைத்து கெட்டியாகனவுடன், தனியாக எடுத்து வைத்துவிடலாம். இது 3 மாதம் வரை கெடாது. தேவையானபோது சாதத்தில் கிளறி சாப்பிடலாம். சாதத்தில் கிளறும்போது கடலைப்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை தாளித்து கொட்டினால் சுவை மேலும் அதிகரிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.