கோடை வெயிலில், வத்தல் செய்து ஒரு வருடம் சேமித்து வைத்து சாப்பிடலாம். அதை எப்படி பதமாக செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - அரை கிலோ
பச்சை மிளகாய் – 6-8
Advertisment
Advertisements
உப்பு தேவையான அளவு
கட்டி பெருங்காயம் - ஒரு பீஸ்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - அரை கிலோ
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசியின் அளவுக்கு 5 மடங்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அரிசியை அதில் வேக வைக்கவும்.
அடுத்து மிக்ஸியில் பச்சை மிளகாய் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
சாதம் வெந்தவுடன், அதில் அரைத்த பச்சை மிளகாய், சீரகம், பெருங்காய் தண்ணீர் சேர்த்து கெட்டியாக தண்ணீர் வற்றும்வரை வேக வைக்கவும். அதன்பிறகு, இறக்கி ஆற வைக்கவும்.
அடுத்து, இதில் எலுமிச்சை சாறு, சின்ன வெங்காயத்தை சேர்த்து கிளறி, முழுக்கு பிழியும் உழக்கில் வைத்து வேட்டியில் பிழிந்து வெயிலில் காயவைத்து எடுத்தால், சுவையான வத்தல் தயார். ஒரு வருடம் வரை இதை ஸ்டோர் செய்து பயன்படுத்தலாம்.