ஞாபக மறதி பிரச்னையா? உணவில் இதை சேர்த்து சாப்பிடுங்க; புற்றுநோயை கூட எதிர்த்து போராடும்!
காலி பெருங்காய டப்பா அதில் வாசனை அதிகமாக இருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, சயைமல் மனத்திற்காக பயன்படுத்தப்படும் இந்த பெருங்காயம் ஏராளமான மருத்துவ நன்மை கொண்டது.
காலி பெருங்காய டப்பா அதில் வாசனை அதிகமாக இருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, சயைமல் மனத்திற்காக பயன்படுத்தப்படும் இந்த பெருங்காயம் ஏராளமான மருத்துவ நன்மை கொண்டது.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களை வைத்தே நமக்கு ஏற்படும் பெருமபாலான நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று நாம் பல புத்தங்கள் மற்றும் இணையதளங்களில் பார்த்திருப்போம். அந்த வகையிலான ஒரு சமையல் மசாலா பொருள் தான் பெருங்காயம். காலி பெருங்காய டப்பா அதில் வாசனை அதிகமாக இருக்கு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, சயைமல் மனத்திற்காக பயன்படுத்தப்படும் இந்த பெருங்காயம் ஏராளமான மருத்துவ நன்மை கொண்டது.
Advertisment
இது குறித்து டாக்டர் கார்த்திகேயன் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். வைரஸ்களை எதிர்த்து போராடும் திறன் பெருங்காயத்திற்கு உண்டு என்று தைவான் நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு டம்ளர் மோர் குடித்தால் அதில் சிறிதளவு பெருங்காய பொடியை கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உலகளவில் 170-க்கு மேற்பட்ட பெருங்காய இனங்கள் உள்ளது. இதில் 3 இனங்கள் இந்தியாவில் உள்ளது.
இந்த பெருங்காயத்தின் வைரஸ் எதிர்ப்பு பண்புதான், சளி தொந்தரவு, இருமல், மூச்சுக்குழாய் அடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிட்கள், புற்றுநோய் போன்ற பிரச்னைகளை எதிர்த்து போராடும். ஜீரணம் தொடர்பான பிரச்னை. அஜீரண கோளாறுகள் ஆகியவற்றை தடுக்க பெருகாயம் பெரிய அளவில் உதவி செய்யும். இரத்த நாளங்களின் ப்ரஷரை குறைக்கும் திறன் பெருங்காயத்திற்கு உண்டு.
Advertisment
Advertisements
புற்றுநோய்க்கு எதிராக செயல்பாடும் பெருங்காயம், குறிப்பாக கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு எதிராக, போரடி அதன் பாதிப்பை குறைக்கும் தன்மை பெருங்காயத்திற்கு உண்டு. புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி மற்றும் அது பரவும் தன்மையை குறைக்க, பெருங்காயம் உதவுகிறது. மூளை தொடர்பான பிரச்னை, ஞாபக மறதி போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் வகையில் நரம்பு மண்டல பிரச்னைகளை குறைக்கும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் பெருங்காயத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.