கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்று. இந்த பழமொழிக்கு உண்மையில் அர்த்தம் என்ன தெரியுமா? நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல வகையாக காய்கறிகளை சாப்பிடுகிறோம். ஆனால் சுரைக்காயை பெரும்பாலும் அதிகம் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. அதே சமயம் மற்ற காய்கறிகளை போல் சுரைக்காயிலும் அதிக நன்மை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளனர்.
Advertisment
சுரைக்காயில் இயற்கையாக உப்புச் சுவை இருப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் வேறானது. பொதுவாக, சுரைக்காயில், எந்தவிதமான தனித்துவமான சுவையும் இருப்பதில்லை. மற்ற காய்கறிகளைப் போல் தனியாகவோ அல்லது குறைந்தபட்சமான மசாலாக்களுடனோ சமைத்து உண்ணுவதற்கு சுரைக்காய் அவ்வளவு சுவையாக இருக்காது. அதற்கு ஏதேனும் ஒரு சுவையூட்டும் பொருள் சேர்க்கப்பட்டால்தான் அதை ருசிக்க முடியும்.
உடலில் ரத்தத்தின் உப்பு அளவு அதிகரிக்கும்போது பல நோய் தாக்கம் ஏற்படும். இதை உடலில் உப்புநீர் கோர்த்துக்கொண்டது என்று சொல்வார்கள். உடலில் உப்பு நீர் அதிகமாகும்போது கை கால்களில் வீக்கம் ஏற்படும். இது சிறுநீரக பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வு தருவது சுரைக்காய். இந்த சுரைக்காயை சாப்பிட்டால் உடலில் உப்பு நீர் இருக்காது. இதனால் தான் சுகை்காய்க்கு உப்பு இல்லை என்ற பழமொழி வந்தது. இதன் உண்மையான அர்த்தம் இதுதான்.
Advertisment
Advertisements
இந்த சுரைக்காயை, நன்றாக வேக வைத்து, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து தினமும் ஒரு கப் சாப்பிட்டுக்கொண்டே வர வேண்டும். இதை ஜூஸாக எடுத்துக்கொள்வதை விட வேகவைத்து சாப்பிடும்போது இதன் பலன் மேலும் அதிகமாக கிடைக்கும். இதில் இருக்கும் நார்ச்சத்து, சிறுநீரக செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால் நம் தினசரி உணவில், சுரைக்காயை சேர்த்துக்கொள்வது முக்கியமானது என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.