உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதே சமயம், உடலில் கொழுப்புகளும் இருக்க வேண்டும். இதில் நன்மை செய்யும் கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரு வகைகள் உள்ளன. நன்மை செய்யும் கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம், கெட்ட கொழுப்பு உடலில் அதிகரத்தால், ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
கெட்ட கொழுப்பு நமது உடலில் இருக்கிறதா இல்லையா இதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கும். இது குறித்து, டாக்டர் தீபா தனது வீடியோவில் கூறியுள்ளார். உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருந்தால், உடலின் இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படும். இரத்தகொதிப்பு நிலையில், பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இதயம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் இருந்தால், தலைவலி இருக்கும். தலை சுற்றல், கண்களில் மங்கலான பார்வை, பேசும்போது நாக்கு குளறுவது, வார்த்தைகளின் தெளிவு இல்லாதது, குமட்டல், வாந்தி வர மாதிரயான உணர்வு, உடல் சோர்வாக இருக்கும். தூக்கமின்மை, இதயம் தொடர்பான குறைபாடுகள் தொடர்பான அறிகுறிகள் தெரியவரும். மலச்சிக்கல், உள்ளிட்ட பல அறிகுறிகள், உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகமான நிலையை காட்டும் அறிகுறிகள்.
இந்த பாதிப்பை தடுக்க, சிறு தானியத்தில், தினை, பார்லி, இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் 3 நாட்கள் அல்லது 7 நாட்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். அதேபோல் பசலைக்கீரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது இதயத்தின் இரத்த குழாய்களை பாதுகாக்கிறது. காய்கறிகளில் சுரைக்காய், பூசனிக்காய், புடலங்காய், ஆகிய காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது.